சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-12-07 13:18 GMT
கூடலூர் செவிடிப்பேட்டையில் இருந்து காளம்புழா, அத்திப்பாளி வழியாக நம்பாலக்கோட்டைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் சிறுத்தை புலி உள்ளிட்ட வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவன், கூடலூர்

மேலும் செய்திகள்