கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-12-04 13:48 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கூத்தாநல்லூர் பகுதி 24- வதுவார்ட்டில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி மக்கள், குழந்தைகள் கொசுக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதன்காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்