வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-12-04 12:50 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் தற்போது பெய்துவரும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்