பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-04 11:54 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட தங்கநகர் குடியிருப்பு பகுதியானது, தினத்தோறும் சுமார் 100 பன்றிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது. குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் சாலைக்கு தள்ளப்பட்டு, சுகாதாரக்கேடு உருவாகிறது. சாலைகளின் ஓரத்தில் தேங்கியுள்ள நீரில், படுத்து எழுந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்