பயிர்களை நாசமாக்கும் பன்றிகள்

Update: 2022-11-30 12:30 GMT

நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் குற்றம்பொருத்தானிருப்பு அய்யனார் கோவில் தெருவில் பன்றிகள் அதிகளவில் உள்ளது. இவை அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் கூட்டமாக மேய்ந்து வருவதால், அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள பன்றிகளை பிடித்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்