பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.