தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-27 10:48 GMT
நாமக்கல் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள்தொல்லை இருந்து வருகிறது. குறிப்பாக சேந்தமங்கலம் சாலையில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் வேகமாக சென்று விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையத்திற்கு செல்வோர் தெருநாய்கள் தொல்லையால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கள்க வேண்டும்.

மேலும் செய்திகள்