மருத்துவ கழிவுகள்

Update: 2022-11-16 10:44 GMT

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் உள்ள சிறு தடுப்பணையில் கோழிக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் அங்கு தேங்கி கிடக்கும் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்கு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்