தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-13 13:37 GMT

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலையில் படுத்துக்கொண்டு அந்த வழியாக நடந்து செல்பவர்களை பார்த்து குரைத்து கடிக்க முயல்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று விபத்தில் சிக்க வைக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்