கூடலூர்-தேவர்சோலை செல்லும் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்கள் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி இன்றி சாலையை கடந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.