வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2022-11-09 13:05 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கள்ளப்பள்ளி ஊராட்சி காந்தி சிலை அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டி பணி முடிந்த பிறகு, தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்ட நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகன ஓட்டிகள் வாகனம் சேற்றில் சிக்கிக்கொள்ளுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்