சேலம் அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் சாமி நகர் சிலோன் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் சாலைகளில் நடந்து செல்வோரை துரத்துவதால் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தியாகராஜன், சேலம்.