கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, தாசில்தார் அலுவலக வளாகம், மார்கெட் உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. மேலும் இவை பள்ளிக்குழந்தைகள், பொதுமக்களை அடிக்கடி கடித்து காயப்படுத்தி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தெரு நாய்களைக் கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.