தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-07-15 18:07 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை தோண்டி அவற்றை சரிசெய்தனர். தோண்டப்பட்ட தார் சாலை மீண்டும் சீரமைக்கப்படாமல் மண்மேடாக உள்ளதால் அவ்ரழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்