மூடப்பட்ட வாகன நிறுத்துமிடம்

Update: 2022-10-05 14:14 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையத்தில் நாள்தோறும் விரைவு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் உட்பட பதினாறுக்கு மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கிறது. அதனால் நாள்தோறும் பல ஆயிரகணக்கான பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் காண்ட்ராக்ட் முடிந்து விட்டதால் அதை தற்போது மூடியுள்ளனர். விரைவில் அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதனால் குளித்தலை, முசிறி, தொட்டியம், துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ரெயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் நாள்தோறும் திருச்சி மற்றும் கரூர் பகுதிகளுக்கு கல்லூரி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் பயனடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி