பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கும் கலாசாரம் தலை தூக்கி உள்ளது. மேலும் தற்போது நகரின் தெரு பெயர் பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் நகருக்கு புதிதாக வருபவர்கள் தாங்கள் செல்லும் தெருவினை கண்டுபிடிப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு பெயர் பலகைகளை மறைத்து விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.