பெரம்பலூர் காமராஜர் வளைவு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த நிலையில் அதனருகே வைத்து கட்டிட கூலி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து கொத்தனார், மெஸ்திரி, கட்டிட ஒப்பந்ததாரர் அழைத்து செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கட்டிட கூலி தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுவார்கள். மேலும் அவர்கள் வரும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவததோடு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கூடி நிற்கும் இடத்தின் அருகே வணிக வளாகத்துக்கு பொதுமக்களால் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட கூலி தொழிலாளர்களை போக்குவரத்து இடையூறு இல்லாத வேறோரு இடத்தில் நின்று வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.