புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-29 14:31 GMT

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஊரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமராபுரம் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாகவும் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்