கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், குப்பம், உப்புப்பாளையம், தென்னிலை, க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரியிலிருந்து ஏராளமான லாரிகளில் சல்லிக்கற்கள், சம்மட்டி கற்கள், அரளை கற்கள் என பல்வேறு ரகமான கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்கின்றனர். அதிவேகமாக லாரி செல்வதால் பாடி மட்டத்திற்கு மேல் கற்கள் மற்றும் ஜல்லிகள் கொண்டு செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதிவேகமாக செல்வதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.