பயணிகள் தவிப்பு

Update: 2022-09-28 16:37 GMT

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பி.ஆர்.டி.சி. பஸ் கண்டமங்கலம் அருகே திடீரென்று விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் டிக்கெட் எடுத்து பயணித்த நிலையில், அனைவரும் இறக்கி நடுவழியில் விடப்பட்டனர். ஆனால் பயண சீட்டுக்கான பணத்தை திருப்பி கொடுக்காமலும், மாற்று பஸ்சில் ஏற்றி விடாமல் கண்டக்டர் அங்கிருந்து நழுவி விட்டார். இதனால் டிக்கெட் எடுத்த பயணிகள் வேறு பஸ்சில் மீண்டும் டிக்கெட் எடுத்து சென்றனர். பணம் இல்லாத ஒருசில பயணிகள் நடுவழியில் தவித்தனர். வரும் காலங்களில் இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்