கொரடாச்சேரி ஒன்றியம் வண்டாம்பாளை ஊராட்சியில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நூலகத்தின் மூலம் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட இந்த நூலகம் தற்போது வரை திறக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். நூலகம் திறக்கப்படாததால், நீண்ட தூரம் சென்று நூலகத்தில் படிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.