தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காமராஜர் தெருவில் உள்ள 3-வது மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக, உடன்குடியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அமைத்து உள்ளனர்.