பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம் கிராம ஊராட்சியில் கிழக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள நல்ல தண்ணீர் தெப்பக்குளம் உள்ளது. முன்பு ஒரு காலத்தில் இந்த குளம் கிராம பொதுமக்களின் குடிநீரை பூர்த்தி செய்து வந்தது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் உள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் உயர இந்த குளம் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதோடு, கிராம ஊராட்சியில் கால்வாய் வடிகால் வசதி ஏற்படுத்த தூர்வாரிய மண்ணை வண்டி, வண்டியாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த தெப்பக்குளத்தை மண்ணை கொட்டி கொட்டி மூடி விடுவார்கள் என்று பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தை கொட்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.