அகற்றப்படாத மரக்கிளைகள்

Update: 2022-07-14 16:51 GMT

திருச்சி கருமண்டபம் செல்வநகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள 2-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் ஓரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் அகற்றப்பட்ட மரக்கிளைகள் சாலையோரம் அப்படியே கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கிளைகள் கழிவுநீர் வாய்க்காலில் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்