அந்தரத்தில் தொங்கும் கண்காணிப்பு கேமரா

Update: 2022-07-14 16:45 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் சமயபுரம் கடைவீதிக்கும், அங்கு கூடும் காய்கறி சந்தைக்கும் தினமும் அப்பகுதி மக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருட்டு, வழிப்பறி, விபத்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் நிலையத்தின் சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படி வைக்கப்பட்ட ஒரு கேமரா கம்பம் கடைவீதியின் ஓரத்தில் சாய்ந்த நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது அடிக்கும் காற்றில் எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்