தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-09-26 14:00 GMT

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி சரிவர இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரிப்பதால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்