தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-09-25 14:26 GMT
அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிதம்பரம் சாலை அய்யனார் கோவில் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்