பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்

Update: 2022-09-24 15:42 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பொரசப்பட்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலையம் கடந்த ஆறு மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதுதான் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கட்டிடமும் சேதம் அடைந்து வருகிறது. இதை தவிர்க்க துணை சுகாதார நிலையத்தை சரியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்