பந்தலூர் பஜார் பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் பஜார் பகுதியில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை சாலையில் விடும் உரிமையாளர்கள் மீது நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.