திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூர் கிராமத்தில் அரசு நிலைப்பாளையம் கிராமத்தில் அ/மி சேப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலுக்கு செல்லும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் கோவில் திருப்பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.