நோயாளிகள் அவதி

Update: 2022-09-23 13:53 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு மேல்தளத்தில் இயங்கி வருகிறது. இதனால் அவரச சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அவரச சிகிச்சை பிரிவை கீழ் தளத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்