நாய்கள் தொல்லை

Update: 2022-09-22 11:12 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கடவாசல் கிராமம் ஆசாத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்களையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், சிறுவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களை நாய்கள் விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்