கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் தார் சாலை ஓரத்தில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவகழிவுகளையும் கொட்டி வருகின்றனர். கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகளையும், மருத்துவக் கழிவுகளை அகற்றி அவற்றை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.