ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எட்டிவயல் கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இந்த கண்மாய் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீர்வளம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.