பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-19 13:40 GMT

சின்னசேலம் அருகே அம்மகளத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகின்றன. இதனால் வகுப்பறையில் மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்