சேலம் மாநகராட்சி 12-வது வார்டு பிள்ளையார் நகர், கோர்ட்டு மெயின் ரோடு ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவு உள்ளது. சாலையில் நடந்து செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது. வாகனங்களில் செல்வாரை துரத்தும் போது அவர்கள் சாலையில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.