பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெளியே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.