தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மாணவர்கள் சுற்றுச்சுவர் அருகே விளையாடும் போது அசம்பாவிதங்கள் நடக்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.