தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து மணப்பாடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. அவை அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களை பதம் பார்க்கின்றன. தற்போது குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே, அதற்குள் முட்செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.