பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2022-07-13 13:36 GMT
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி ,மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவை வீடுகள் மற்றும் கடைகளில் வைத்துள்ள அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களையும் குழந்தைகள் வயதானவர்களையும் கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்