குரங்கு தொல்லை

Update: 2022-09-14 12:34 GMT
பகண்டை கூட்டுரோட்டில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. மேலும் வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் கொண்டு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்