காட்சி பொருளான பஞ்சாயத்து அலுவலகம்

Update: 2022-09-14 11:33 GMT

ஓட்டப்பிடாரம் யூனியன் எப்போதும்வென்றான் பஞ்சாயத்து அலுவலகம் கடந்த 2019  -ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் அதனை திறக்காததால் காட்சிப்பொருளாகவே உள்ளது. தற்போது வரிவசூல் மையத்திலேயே பஞ்சாயத்து அலுவலகமும் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. எனவே புதிய பஞ்சாயத்து அலுவலகத்தை திறந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முத்து, எப்போதும் வென்றான்.

மேலும் செய்திகள்