தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-09-13 15:12 GMT
சென்னை எண்ணூர், வார்டு -1,2, மண்டலம் -1, கத்திவாக்கம் காமராஜர் நகர், சத்தியவாணி முத்து நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, சிவன் படை வீதி, நேரு நகர் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் உலாவுகின்றன. இந்த நாய்கள் இரவு நேரத்திலும், அதிகாலையும் செல்வவர்களை அச்சுருத்துகின்றன.மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை விரட்டுவதும், துரத்தி சென்று அவர்களை கடிக்கவும் முயல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். தெரு நாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்