தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-13 12:23 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பகுதியில் ஏடி காலனி சாலையில் பள்ளம் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்