ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முதுனாள் கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடமாக உள்ளது. எனவே புதிய சமுதாய கூட கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.