ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.