ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-09-13 11:39 GMT
சங்கராபுரம் அருகே வாணாபுரம் ஊராட்சியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்னதாக சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் அதனை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும் செய்திகள்