ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-13 10:47 GMT

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சீயாத்தமங்கை பகுதி ஜீவா நகரில் அய்யனார் கோவில்குளம் உள்ளது.இந்த குளத்தை ஜீவாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குளம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்