கழிவறை வசதி வேண்டும்

Update: 2022-09-13 10:46 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் நூற்றுகணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு முறையான கழிவறை வசதி இல்லை. இதன் காரணமாக பத்திரபதிவுக்காக வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அங்கு பணிபுரிபவர்கள் பயன்படுத்தும் கழிவறையும் சங்கிலி போட்டு பூட்டப்படுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பத்திரப்பதிவுக்கு வருபவர்களின் நலன் கருதி கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்