விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்த முட்புதர்கள்

Update: 2022-07-12 18:33 GMT

  நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி ஊராட்சி கானாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே விளையாட்டு மைதானம் உள்ளது. தற்போது இந்த விளையாட்டு மைதானம் உரிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மைதானத்துக்கு விளையாட செல்லும் சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் முட்புதர்களால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. விளையாட்டு வீரர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்